Sunday, December 16, 2012

சோகமும் சுகமானது நீ நண்பனாக கிடைத்ததால் !!!

அன்று  யாருமே  அறியாத 
என் சோகத்தை 
எப்படி அறிந்தாயடா ?
ஏன் சோகம் ?
என்ற உன்  கேள்வி  தான் 
நம் நட்பின் ஆரம்பம் !!!

அதிகம் பேசாமலே 
நீ என்னை அறிந்தாய் 
நம் நட்பு வளர்ந்தது !!

உன்னுடன் பேசும் 
ஒவொரு நொடியும் 
மகிழ்ச்சியை மட்டுமே 
தருகிறாய் !!!

சோகத்தில் தல்லப்பட்ட 
என்னை 
சிரிக்கவும் வைத்தாய் ,
சிந்திக்கவும் வைத்தாய் .
சோகமும் சுகமானது 
நீ நண்பனாக கிடைத்ததால் !!!

உண்மையான நட்பின் அடையாளம்!


தோழியே !
நீ அருகில் இல்லை
ஆனாலும் உணர்கிறேன்
உன்னை !

கலங்கி நின்ற நிமிடம்
உன் குரல் கேட்டதும் ,
துணிந்து நின்றேன் !

கண்கள் இரண்டில் ,
கண்ணீர் முட்ட ,
உன் நினைவு , கண்ணீரையும் துடைத்தது ,
அருகில் நீ இல்லாமலே !

யாரும் இல்லை என்ற கவலை
அறவே இல்லை .
அருகில் இல்லாமல் இருந்தாய் நீ !

பயத்தில் , நடுக்கத்தில் இருந்ததை ,
எப்படி உணர்ந்தாய் ?
இது  பெயர் தான் நட்போ ?

தினம் தினம் பேசிக்கொண்டு ,
சிரித்து  கொண்டால் தான் நட்பா ?
இல்லை !!!!
என்  இன்பத்தையும் ,
துன்பத்தையும் சொல்லாமலே ,
புரிந்து  கொல்லும்
நீ தான் , உண்மையான நட்பின் அடையாளம் !

To my dear friend

நீ மிகவும் விரும்பும் கவிதைகளை 
 உனக்காகவே மீண்டும் எழுத துவங்கி விட்டேன் !
பிழைகளை மன்னிக்கவும் !