Sunday, December 16, 2012

உண்மையான நட்பின் அடையாளம்!


தோழியே !
நீ அருகில் இல்லை
ஆனாலும் உணர்கிறேன்
உன்னை !

கலங்கி நின்ற நிமிடம்
உன் குரல் கேட்டதும் ,
துணிந்து நின்றேன் !

கண்கள் இரண்டில் ,
கண்ணீர் முட்ட ,
உன் நினைவு , கண்ணீரையும் துடைத்தது ,
அருகில் நீ இல்லாமலே !

யாரும் இல்லை என்ற கவலை
அறவே இல்லை .
அருகில் இல்லாமல் இருந்தாய் நீ !

பயத்தில் , நடுக்கத்தில் இருந்ததை ,
எப்படி உணர்ந்தாய் ?
இது  பெயர் தான் நட்போ ?

தினம் தினம் பேசிக்கொண்டு ,
சிரித்து  கொண்டால் தான் நட்பா ?
இல்லை !!!!
என்  இன்பத்தையும் ,
துன்பத்தையும் சொல்லாமலே ,
புரிந்து  கொல்லும்
நீ தான் , உண்மையான நட்பின் அடையாளம் !

No comments: